Grab பயனர்களுக்கு தகவல்
Grab நிறுவனம் அதன் இணையத்தளச் சேவைக் கட்டணத்தை 30 காசு உயர்த்தவுள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இந்த உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.
தற்போது 90 காசாக உள்ள சேவைக் கட்டணம், அடுத்த ஆண்டு 1 வெள்ளி 20 காசாக அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்விற்கு, இணையத்தளச் சேவை ஊழியர்கள் தொடர்பான புதிய சட்டம் காரணமாக இருப்பதாக CNA ஊடகம் தெரிவித்தது.
அந்தச் சட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி (CPF) சந்தா விகிதம் அதிகரிக்கப்படும். மேலும், பணியின்போது காயம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்கப்படுவதுடன், சட்ட உதவியும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதற்குப் பிறகும், இணையத்தளப் பராமரிப்பு மற்றும் சேவைகளின் மேம்பாட்டிற்காக கட்டணம் உயர்த்தப்படுவதாக Grab நிறுவனம் விளக்கியது.
இந்த கட்டண உயர்வு தனியார் வாடகைக் கார் சேவைக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, 50 காசு ஓட்டுநர் கட்டணம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை தொடரும். அந்தத் தொகை எரிபொருள் செலவுக்காக பயன்படுத்தப்படும் என Grab தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் PSA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
