சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சிங்கப்பூரின் சில வட்டாரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் போண்டாய் கடற்கரையில் சமீபத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக CNA முன்வைத்த கேள்விக்கு அமைச்சு பதிலளித்தது.
பாதுகாப்பு அமைப்புகள் நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது.
