
இயற்கைப் பேரிடர்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 நாடுகளுக்கு தலா 50,000 சிங்கப்பூர் டாலர் நிவாரணம் வழங்கப்படுவதாக சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.
உதவி பெறும் நாடுகள்:
- இலங்கை
- மலேசியா
- தாய்லந்து
- இந்தோனேசியா
- வியட்நாம்
தற்போதைய நிலை
▶ இந்தோனேசியாவில் கடந்த வாரம் தொடர்ச்சியான மழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன.
▶ மலேசியா, தாய்லந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் வெள்ளமும் புயலும் மக்கள் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளன.
▶ இலங்கை தற்போது அண்மையில் இல்லாத அளவுக்குப் பேரிடர் தாக்கத்தால் சிக்கியுள்ளது.
பேரிடர் தாக்கம்
- பலர் உயிரிழப்பு
- ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து இடம்பெயர்வு
- முக்கிய கட்டமைப்புகள் சேதமடைந்தமை
இந்த அவசர நிலையை முன்னிட்டு உயிர்ச் சேதங்களை குறைக்க உடனடி உதவி அவசியம் என்று சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் உள்ளூர் அமைப்புகளுக்குத் தங்களது ஆதரவை அனுப்புகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
