பிரபல முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி
சிங்கப்பூரின் பிரபல முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி மாரடைப்பால் காலமானார்
சிங்கப்பூரின் பிரபல முன்னாள் வழக்கறிஞர் எம். ரவி மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அவரது மரணத்தில் எந்தவித சூதும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
திரு ரவி இன்று (24 டிசம்பர்) காலை 6.50 மணியளவில் டான் டொக் செங் மருத்துவமனையில் காலமானதாக காவல்துறையினர் ‘செய்தி’-யிடம் தெரிவித்தனர். அவர் சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றிய திரு ரவி, மனித உரிமை சார்ந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக, மரண தண்டனை எதிர்நோக்கிய பலருக்காக அவர் சட்டப் பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளார். மேலும், இலவசமாக சட்டச் சேவை வழங்கியதற்காகவும் அவர் பரவலான பாராட்டைப் பெற்றவர்.
படிப்பு அவசியம் இல்லை..! சிங்கப்பூரில் E Pass வேலை வாய்ப்பு
