தீய மென்பொருள் மோசடியில் $3.2 மில்லியன் இழப்பு மலேசிய நபருக்கு 5.5 ஆண்டு சிறை

தீய மென்பொருள் மோசடியில் $3.2 மில்லியன் இழப்பு
தீய மென்பொருள் மோசடியில் $3.2 மில்லியன் இழப்பு

தீய கணினி மென்பொருளைப் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கும் காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்ட மோசடிக் கும்பல், சிங்கப்பூரில் மொத்தம் 3.2 மில்லியன் வெள்ளி இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சுமார் 130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் காணொளிகளைத் தயாரித்த மலேசியர் சியோ ஹாய் பெங் (49), சிங்கப்பூர் நீதிமன்றத்தால் ஐந்தரை ஆண்டுகள் சிறை மற்றும் 3,600 வெள்ளி அபராதம் என தண்டிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் இப்படிப்பட்ட குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்ட முதல் வழக்காக இது பதிவாகியுள்ளது.

2008 ஆம் ஆண்டு தென் கொரியாவில் சிறையில் இருந்தபோது சியோ, தைவானைச் சேர்ந்த லீ ரோங் டெங் என்பவரை சந்தித்தார். லீயின் வற்புறுத்தலுக்குப் பிறகே சியோ மென்பொருள் பயிற்சி காணொளிகளைத் தயாரிக்க ஒப்புக்கொண்டதாக நீதிமன்றம் முன் தெரியவந்தது.

2023 பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுமார் 20 காணொளிகளை சியோ உருவாக்கி, லீ வழிநடத்தும் மோசடிக் குழுவுக்கு அனுப்பினார். அந்தக் கும்பல் இந்தக் காணொளிகளைப் பயன்படுத்தி தீய மென்பொருளைச் செல்பேசிகளில் நுழைப்பது போன்ற முறைகளை கற்றுக்கொண்டு, சிங்கப்பூரில் Android பயனர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டது.

சியோ கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி பினாங்கில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.

சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்பு அறிவிப்பு!

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top