
சிங்கப்பூரின் அப்பர் பூன் கெங் (Upper Boon Keng) ரோட்டில் உள்ள ஒரு காப்பிக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
நள்ளிரவுக்குப் பிறகு கூச்சலான சத்தம் கேட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பவர்கள் தெரிவித்தனர்.
ப்ளாக் 11-ல் அமைந்துள்ள காப்பிக் கடையின் சமையல் அறையில் தீ முதலில் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
குடிமைத் தற்காப்புப் படை உடனடியாக விரைந்து வந்து, இரண்டு தண்ணீர் பாய்ச்சும் கருவிகளின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தியது என்று ‘செய்தி’க்கு தெரிவித்துள்ளது.
காப்பிக் கடைக்குள் செயல்பட்ட பல கடைகள் வெப்பம் மற்றும் புகை காரணமாக சேதமடைந்தன. கரும்புகை சுவாசித்த ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட தரப்புகள் விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
